திண்டுக்கல்
ஜூலை: 07
திண்டுக்கல் காட்டுநாயக்கன் (எஸ்டி) பழங்குடியினருக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ செல்லகாளியம்மன் கோவில் 135 – ஆம் ஆண்டு திருவிழா நிகழ்ச்சி திண்டுக்கல் காட்டுநாயக்கன் தெருவில் உள்ள முனிசிபல் காலனியில் நடைபெற்றது. திமுக கழக பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சருமான இ.பெரியசாமி வழிகாட்டுதலின்படி இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மேயர் இளமதி தலைமை தாங்கி பால்குட விழாவினை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிழக்குப்பகுதி செயலாளர்
அ.இராஜேந்திரகுமார், மேற்குப்பகுதி செயலாளர் ப.பஜுலுல் ஹக் , வடக்கு பகுதி செயலாளர் ஜானகிராமன், தமிழ்நாடு காட்டுநாயக்கன் சங்க மாநிலத் தலைவர்
ஏ.சின்னையா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் காட்டுநாயக்கன் சமூக நல சங்க கௌரவ ஆலோசகர் எஸ்.முத்தையா, சங்கத் தலைவர் எஸ். ஜீவா, செயலாளர் ஜி. குமார், பொருளாளர் எம்.காளிதாஸ் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.