கம்பம்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா தே. சிந்தலைச்சரி ஊராட்சியில் எஸ்.கே.ஜி. மருத்துவமனையின் சார்பில் மருத்துவ முகாம் மருத்துவர் அமுதக்குமார் MD ஆலோசனையின் படி நடைபெற்றது.மருத்துவ முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணி கலந்து கொண்டு பொது மக்களுக்கு தேவையான இலவச பொது மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார் பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் கலந்து கொண்டு மக்களுக்கு தேவையான மருத்துவ வசதியினை மற்றும் நோயினை கண்டறியப்பட்டு அதற்கு தீர்வு அளிக்கும் வகையில் திருமங்கலத்தில் செயல்பட்டு வரும் எஸ் கேஜி மருத்துவமனைக்கு வந்து பயன்பெற்று கொள்ளலாம் என தெரிவித்தனர்,இம்மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர், இம் மருத்துவ முகாமினை மருத்துவமனையின் மக்கள் தொடர்பு அலுவலர் நந்தகுமார் மற்றும் ரமேஷ் குமார் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.



