சென்னை, ஆகஸ்ட் 28 –
இந்து மக்கள் கட்சியின் சக்தி சேனா சார்பாக 29-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா சென்னை ஜாபர்கான் பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் நடைபெற்றது. இவ்விழா பூஜையின் தொடக்கத்தில் விநாயகர் சிலையின் கண் திறக்கப்பட்டு பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சூழ யாகம் வளர்த்து கற்பூர ஆராதனை செய்யப்பட்டு அனைவரும் வழிபட்டனர்.
இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஆர். சக்திவேல் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில அர்ச்சகர் அணித்தலைவர் என். துளசிதாஸ் நம்பூதிரி, சிவாச்சாரியார் யூ. ரமேஷ், இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பாரதமாதா செந்தில், பாரத மாதா மக்கள் அறக்கட்டளையின் செயலாளார் பிரவீன்சந்த், இந்து மக்கள் கட்சி சென்னை மாவட்ட தலைவர் ஆர். கன்னியப்பன், தென் சென்னை மாவட்ட செயலாளர் எஸ். சிவகுமார், தென் சென்னை மாவட்ட இளைஞர் அணி செயலாளர்கள் எஸ். சுரேந்திரகுமார், சி. மூர்த்தி, விநாயகர் ஏற்பாட்டு குழு தலைவர் பாரதி நகர் ராஜு, இந்து மக்கள் கட்சி சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என். சங்கர், தென் சென்னை இளைஞர் அணி பொறுப்பாளர் பி மற்றும் விரையகர் ஏற்பாட்டு குழு உறுப்பினர் உள்ளிட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அப்பகுதி மக்களுக்கும், பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



