கிருஷ்ணகிரி, ஜுன்.4- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பர்கூர் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி 102-வது பிறந்த நாள் விழா தே.மதியழகன் எம்எல்ஏ தலைமையில் கலைஞர் திருவுருவு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே.கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் ஏ.சி.நாகராஜ், மாவட்ட பொருளாளர் கதிரவன், மாவட்ட அவை தலைவர் நாகராஜ், பேரூராட்சி தலைவர் சந்தோஷ் குமார், பர்கூர் பேரூர் நகர் செயலாளர், வெங்கட்டப்பன்,மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பாலன், ஒன்றிய கழக செயலாளர்கள் அறிஞர், வி. ஜி. ராஜேந்திரன், இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் எஸ். பாலாஜி,ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ் (எ) ராஜதுரை, தலைமை கழக பேச்சாளர் ஜான் சுந்தர்,பேரூராட்சி தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜீவா துரைசாமி, ஒன்றிய பிரதிநிதி பி.கே.ரமேஷ், மாவட்ட பிரதிநிதி காந்தி, துணை நகர செயலாளர் இ. டி. மகேந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் துணை அமைப்பாளர் சிவகார்த்திகேயன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் ஆர்.ஸ்ரீதேவி ரமேஷ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் மஞ்சுளா உள்பட ஏராளமான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



