மதுரை ஜூலை 01
மதுரை விமான நிலையம் அருகே உள்ள நாகரத்தினம் அங்கலம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஒரு நாள் ஆசிரியர் மேம்பாட்டு திறன் பயிற்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடத்தை அறிவியல் ஆரோக்கியம் மற்றும் மனநல ஆலோசகரின் வழிகாட்டியான Mrs.C.Meena சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனைத் தொடர்ந்து கல்லூரி செயலாளர் Dr.N.Jegatheesan தலைமையில் கல்லூரி முதல்வர் டாக்டர் வி. வசந்த குமார் வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதன் பின்னர் சிறப்பு விருந்தினர் மீனா பேசுகையில் ஆசிரியர் பெருமக்கள் உள் தர உத்தரவாதப் பிரிவு (IQAC) கல்லூரி ஆசிரியர்களின் திறமை மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி மந்திரங்கள் மற்றும் தந்திரங்களை கற்பிக்கும் மாயாஜாலம் என்ற தலைப்பில் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தார்.
விழா நிறைவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சி.கலைச்செல்வன் நன்றி தெரிவித்தார் விழா இனிதே நிறைவு பெற்றது.