By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலையில் பள்ளி மாணவி உட்பட 5 பேரை கடித்த தெரு நாய்

Last updated: June 25, 2024 10:53 am
June 25, 2024 47 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 23 

 

குமரி மாவட்டம் தக்கலையில் மார்க்கெட் சாலையில் மீன் சந்தை, காய்கறி சந்தை, இறைச்சி கடை, உணவகங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. காலை முதல் இரவு வரை மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும், இப்பகுதியில் தெரு நாய்கள் ஆங்காங்கு கிடைக்கும் உணவு பொருட்களை உண்பதற்காக கூட்டமாக செல்வதுண்டு.

இந்தநிலையில், காலை சந்தையில் காய்கறி வாங்குவதற்காக வந்த சுலோக்சனா (வயது 72), கோழிப்போர்விளையை சேர்ந்த சாந்தி (வயது 45 ) ஆகியோரை அங்கு தனியாக சுற்றி திரிந்த தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதில், அவர்களுக்கு காலில் காயம் ஏற்பட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.மாலை தக்கலையில் வசிக்கும் பள்ளி படிக்கும் ஸ்ரீனிகா (வயது 11) பள்ளி முடிந்து தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் தக்கலை மார்கெட் சாலையில் உள்ள ஒரு பழக்கடையில் பழம் வாங்குவதற்கு மோட்டார் சைக்கிளை கடை முன்பு நிறுத்தி ஸ்ரீனிகாவை அதன் அருகில் நிற்குமாறு கூறிவிட்டு பழம் வாங்கி கொண்டிருந்த போது ஏற்கனவே, இரண்டு பேரை கடித்த அதே தெருநாய் மாணவி ஸ்ரீனிகாவின் வலது முழங்காலை கடித்து பலத்த படுகாயம் ஏற்பட்டு அலறினார்.

 

உடனே மாணவியை தக்கலை அரசு மருத்துவமனைக்கு அவரது தந்தை அழைத்து சென்றார். மாணவியின் கால் தசையை கடித்ததால் அவரது காலுக்கு கட்டு போடப்பட்டது. பின்னர், சரல்விளையை சேர்ந்த லிங்கம் (வயது 42) என்பரின் கையை கடித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய நாய் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்த தக்கலையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெத்தேல்புரத்தை சேர்ந்த ஜினி (வயது 35) என்பவரின் காலில் கடித்துள்ளது. இதில், காயம் ஏற்பட்டு  இருவரும் தக்கலை அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒரே நாளில், 5 பேரை கடித்து குதறிய தெருநாய் அப்பகுதியில் காணப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வெறி நாயாக மாறியுள்ள இந்த தெரு நாயை பிடிப்பதோடு, பத்மநாபபுரம் நகராட்சி பகுதியில் காணப்படும் தெரு நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You Might Also Like

முதுகுளத்தூர் அருகே ஊர் பெயர் வழிகாட்டிப் பலகை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திமுக, அதிமுகவுக்கு எதிராக தேவர் சமூகத்தினரிடம் நோட்டாவுக்கு ஓட்டு கேட்போம் – தேசிய தேவர் பேரவை தலைவர் செந்தூர் பாண்டி

குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 601 பேருக்கு பணி உறுதி கடிதம்

ராயல் கேர் மருத்துவமனை சார்பில் திருவாசகம் முற்றோதல் பெருவிழா

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
சிவகங்கைமாவட்டம்

ஸ்ரீ தண்டீஸ்வரர் அய்யனார் திருக்கோயிலில் சனிக்கிழமை

August 18, 2024 35 Views
புதிய கலையரங்கம் பி.டி.செல்வகுமார் அடிக்கல்
அறக்கட்டளை தலைமைச் செயல் அலுவலகம் திறப்பு விழா
அரசு உயர்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்தும் மாரத்தான் 2025 இளைஞர்கள் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?