தென்காசி மாவட்டம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 11 குழந்தைகளுக்கு தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய பழனி நாடார் தங்க மோதிரம் வழங்கினார் நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதகிருஷ்ணன், தென்காசி நகரத்தலைவர் மாடசாமி ஜோதிடர் ,பொதுச் செயலாளர் சந்தோஷ் ,நகர துணைத் தலைவர் சித்திக், முரளி ராஜா ,ஈஸ்வரன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



