வேலூரில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
வேலூர், செப்.14:
வேலூரில் உள்ள சுற்றுலா மாளிகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழ்நாட்டில் மத நல்லிணக்கத்துடன், சாதி, மத பாகுபாடின்றி அரசு செயல்பட்டு வருவதாகவும், அனைவரும் சமம் என்ற அடிப்படையில் அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்டங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஆதரவுடன் தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடைபெற்று வருவதாகவும், முதலமைச்சர் விஜய் தொலைநோக்கு சிந்தனையுடன் நலத்திட்டங்களை உருவாக்கி வருவதாகவும் கூறினார்.
உணவு உற்பத்தி, நிலவரி ரத்து, பட்டா வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விளக்கமளித்தார். நிலவரி ரத்து செய்யப்பட்டதால் வருவாய்த்துறைக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் 1,500 சர்வேயர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இடத்தை அளந்து, எல்லைக் கல் அமைத்த பிறகே பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடுவது குறித்து அவர்களுக்கென கொள்கை உள்ளது; அதன் அடிப்படையில் அவர்கள் முடிவு செய்துள்ளனர். இதனால் எங்களுக்கு எந்த பின்னடைவும் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.



