சென்னை, செப்.12:
சென்னையின் வேகமாக வளர்ந்து வரும் போரூர்–பூந்தமல்லி பிரதான சாலையில், டேக் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ரா-லக்சுரி குடியிருப்பு திட்டமான ‘பால்மன்டைசா’ அறிமுகப்படுத்தப்பட்டது. குமணன் சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள இத்திட்டத்தின் லோகோ அறிமுகம் மற்றும் தொடக்க விழா ‘பால்மன்டைசா’ வளாகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் டேக் டெவலப்பர்ஸ் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குநர் சதீஷ்குமார் சந்தானம், ஃபஸ்ட் பார்ட்னர்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியும், ஜோஹோ நிறுவனத்தின் இணை தொடங்குநருமான குமார் வேம்பு, ஆதித்ய பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் கட்டுமான நிதிப் பிரிவு சீனியர் ரிலேஷன்ஷிப் மேலாளர் ஆர்.ஹரி விக்னேஷ், ஆதித்ய பிர்லா ஹவுசிங் பைனான்ஸ் ப்ரைம் ஹோம் லோன்ஸ் பிரிவு மண்டல விற்பனை மேலாளர் மஞ்சுநாத் செல்வமணி, நில உரிமையாளர் குமரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து டேக் டெவலப்பர்ஸ் நிறுவனர் சதீஷ்குமார் சந்தானம் கூறுகையில், போரூர்–பூந்தமல்லி பிரதான சாலையில் அமைந்துள்ள இத்திட்டம், குமணன் சாவடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால் சென்னையின் முக்கிய பகுதிகளுடன் எளிதான இணைப்பை வழங்கும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தார். அன்றாடப் பயணம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற வகையில் முக்கிய இடங்களை எளிதில் அணுகும் வசதியையும் இத்திட்டம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
194 குடியிருப்புகள் கொண்ட ‘பால்மன்டைசா’வில் 2 மற்றும் 3 படுக்கையறை கொண்ட வீடுகளும், விசாலமான 4 மற்றும் 5 படுக்கையறை கொண்ட டியூப்லெக்ஸ் வீடுகளும் இடம்பெற்றுள்ளன. நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வீடுகளின் வடிவமைப்பு மற்றும் வசதிகள் உருவாக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தின் சிறப்பம்சமாக தரைத்தளம் மற்றும் 3 தளங்களைக் கொண்ட 10,000 சதுர அடி பரப்பளவில் ‘தி மெரிடியன்’ என்ற கிளப் ஹவுஸ் தனிக் கட்டிடமாக அமைய உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட நவீன வசதிகள் இடம்பெற உள்ளன. போடியம், நீச்சல் குளம், உள்விளையாட்டு அரங்கம், மல்டிபர்பஸ் ஹால், மினி தியேட்டர், ரூஃப்டாப் பார்ட்டி ஹால், யோகா அறை உள்ளிட்ட உடற்பயிற்சி, பொழுதுபோக்கு மற்றும் ஓய்வு வசதிகள் குடியிருப்பாளர்களுக்காக உருவாக்கப்பட உள்ளன.
மேலும், இரண்டு பேஸ்மெண்ட் தளங்கள் மற்றும் ஸ்டில்ட் லெவல் என மொத்தம் 3 தளங்களில் பார்க்கிங் வசதியும், 13 தளங்களில் குடியிருப்பு வசதிகளும் அமைய உள்ளன. நவீன வசதிகள், சிறந்த போக்குவரத்து இணைப்பு மற்றும் பிரீமியம் வாழ்க்கை முறையை ஒருங்கிணைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘பால்மன்டைசா’ குடியிருப்பில் ஒரு வீட்டின் விலை ரூ.1.19 கோடியில் இருந்து தொடங்குகிறது. எதிர்கால வளர்ச்சி, சிறந்த இருப்பிடம், பிரீமியம் வாழ்க்கை முறை மற்றும் நீண்டகால முதலீட்டு வாய்ப்புகளை ஒருங்கிணைக்கும் புதிய அல்ட்ரா-லக்சுரி குடியிருப்பு முகவரியாக ‘பால்மன்டைசா’ உருவாகும் என சதீஷ்குமார் சந்தானம் தெரிவித்தார்.



