சேலம், செப். 7:
சேலம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும், அடிப்படை தேவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், ஒருமுறை அளித்த மனுக்கள் மீண்டும் வராத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உதவி உபகரணங்கள், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக 456 மனுக்கள் பெறப்பட்டன. மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி மனுக்களை அளிக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரக தரைத்தளத்தில் சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட 10 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர்



