தருமபுரி, ஆகஸ்ட் 04 –
தருமபுரி மாவட்ட திமுக சார்பில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து தருமபுரி நான்கு ரோட்டில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறையை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன், நகர செயலாளர்கள் நாட்டான் மாது, கௌதம், நகரத் துணைச் செயலாளர் முல்லைவேந்தன், தலைமை கழக பேச்சாளர் டி.ஏ.ரவி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசோக் குமார், கலை இலக்கிய பகுத்தறிவு அணி தலைவர் டி.ஏ.குமார், ஒன்றிய செயலாளர்கள் டி.எல்.காவேரி, ஏ.சி.சண்முகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் எச்சனயள்ளி சண்முகம், ஏ.மாதேஸ்வரன், உஷா ராஜேந்திரன் மற்றும் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.



