தஞ்சாவூர், ஆகஸ்ட் 3 –
கொள்முதல் நிலையங்களில் நெல் முட்டைகளின் பாதுகாப்பு குறித்து கலெக்டர் ரேவதி திடீர் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் திடீர் திடீரென மழை பெய்து வருகிறது. லேசான சாரலுடன் தொடங்கிய மழை கன மழையாக பெய்தது. இந்த கன மழை உள்ள தாழ்வான இடங்களில் உள்ள சாலையில் தண்ணீரில் தேங்கியது. ஒரு புறம் வெயில் ஒருபுறம் மழை என குழப்பமான வானிலையால் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். விளைவித்த நெல்லை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கும் நிலையில் உள்ளது.
திடீரென மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் பாதுகாப்பாக இருக்க புதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக கலெக்டர் ரேவதி திடீரென ஆய்வு செய்தார்.
கும்பகோணம் அருகே மூப்பக் கோவில், ஏரகரம், புளியஞ்சேரி, மருத்துவகுடி ஆகிய இடங்களில் உள்ள கொள்முதல் நிலைகளில் ஆய்வு மேற்கொள்ள கலெக்டர் விவசாயிகளிடம் குறைகளை கேட்டிருந்தார். கொள்முதல் நிலை யங்களில் நெல் முட்டைகளை மழையில் நனையாமல் இருக்கும் வகையில் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும் என்று பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது உதவி கலெக்டர் திருமலை, நுகர்பொருள் வாணிபக் கழக மண்டலத்துறை மேலாளர் இளங்கோ மற்றும் பலர் உடன் இருந்தனர்.



