By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழில் மேம்படுத்தப்படும்: கைத்தறி, கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழில் மேம்படுத்தப்படும்: கைத்தறி, கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தென் மாவட்டங்களில் கைத்தறித் தொழில் மேம்படுத்தப்படும்: கைத்தறி, கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி தகவல்

Last updated: August 1, 2026 5:53 pm
August 1, 2026
28 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 1 –

கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி துறையின் சார்பில் ஆரல்வாய்மொழியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நூற்பாலை மற்றும் வடசேரி பகுதியில் அமைந்துள்ள நெசவாளர் கூட்டுறவு சங்கம் ஆகியவற்றை அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சிக்கு கைத்திறன், கைத்தறி துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைச் செயலாளர் வெங்கடேஷ் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் முன்னிலை வகித்தார்.

அமைச்சர் எம்.விஜய் பாலாஜி ஆய்வு மேற்கொண்டு கூறியதாவது: ஆரல்வாய்மொழி நூற்பாலை 1965ம் ஆண்டு நிறுவப்பட்டு, தற்போது 62 நிரந்தர தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 244 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நூற்பாலையின் அன்றாட உற்பத்தித் திறன், நூல் தரம் மற்றும் இயந்திரங்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்களைச் சந்தித்து, அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறியப்பட்டது.

தற்காலிகப் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தொழிலாளர்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது ஆலையின் உற்பத்தித் தரத்தை உயர்த்தி, இலாபகரமாக இயக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

தொடர்ந்து வடசேரி பெரியராசிங்கன் தெரு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது 382 இயங்கும் தறிகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த 2025-2026 ஆம் நிதியாண்டில் ரூ.260.88 இலட்சம் மதிப்பிலான ஜவுளிகள் உற்பத்தி செய்யப்பட்டு ரூ.304.55 இலட்சம் மதிப்பிலான ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டு சங்கம் தொடர் இலாபத்துடன் இயங்கி வருகிறது. தென் மாவட்டங்களில் கைத்தறி தொழிலை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகும். மேலும் கைத்தறி பூங்கா அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் கன்னியாகுமரி கூட்டுறவு சங்க நூற்பாலை மேலாண்மை இயக்குநர் முருகையா, கைத்தறி உதவி இயக்குநர் ஜெயசுதா, வடசேரி கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநர் பிரிட்மேன், துணை இயக்குநர் அருணாச்சலம், பணியாளர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

செங்கவிளை ரேஷன் கடை காலி சாக்குகளை அகற்ற கோரிக்கை
நாகர்கோவிலில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் அவுட் ரீச் நிகழ்ச்சி
பூதப்பாண்டி அருகே அனுமதியின்றி மண் கடத்திய வக்கீல் மீது வழக்கு
ஆரல்வாய்மொழி அருகே அரசு பஸ் பைக் மோதி வாலிபர் பலி
திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் மீனவர் நலத்துறை அலுவலர்களுடன் 2 அமைச்சர்கள் ஆய்வு

June 8, 2026
35 Views
புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிட பூமி பூஜை
திருவாடனை ஒன்றியம் கல்லூர் ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டமைப்பு செயல்பாடுகள் கலெக்டர் ஆய்வு
வாடிப்பட்டி அரசு பள்ளிகளில் தமிழில்அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா
குண்டும் குழியுமாக காணப்பட்ட தேசிய நெடுஞ்சாலை.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account