கிருஷ்ணகிரி, ஜூலை 25 –
கிருஷ்ணகிரி மாவட்டம் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கே , ஆர். பி அணை கட்ட நிலம் கொடுத்தவர்கள் மற்றும் வன நிலத்தில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்கப்பட வேண்டும் என்பதை வழியூறுத்தி வருகின்ற 28-ம் தேதி ஓசூர் வன கோட்டம் அலுவலகம் முன்பாக கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடத்தப் போவதாக தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.
இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வனத்துறை அதிகாரியுடன்
தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் இராம கவுண்டர் தலைமையில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பேச்சிவார்த்தையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இராமகவுண்டர் கே.ஆர்.பி. அணை கட்ட நிலம் கொடுத்து சுமார் 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவர்கள் கிருஷ்ணகிரி, சூளகிரி என பல்வேறு வனப்பகுதியையொட்டி குடி அமர்த்தப்பட்டனர். ஆனால் இது வரை குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்கவில்லை, இதே போல வனப்பகுதியில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கும் பட்ட வழங்கப்படவில்லை என்று வனத்துறை அதிகாரியிடம் எடுத்து கூறியதை அடுத்து, இது தொடர்பாக தமிழக முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினார்கள்.
ஆனாலும் நாங்கள் அறிவித்துள்ளதின் படி வருகின்ற 28ம் தேதி ஓசூர் வன கோட்ட அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பட்டா வழங்க போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்தின் வாயிலாக தமிழக முதல்வர் ஜோசப் விஜயாவது 100 ஆண்டுகளாக பட்டா இன்றி தவிக்கும் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பார் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் மேகதாது அணை விவாகரத்தில் கர்நாடகா முதல்வரை தமிழக முதல்வார் சந்திப்பதை அரசியல் ஆக்க வேண்டாம் என்பது என்னுடை கருத்து என்று குறிப்பிட்டார் இராம கவுண்டர் மாநில தலைவர்.



