நாகர்கோவில், ஜூலை 23 –
தென் தமிழ்நாட்டில் நரம்பியல் சிகிச்சை சேவைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், உலக மூளை தினத்தையொட்டி நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனையில் முழுமையான பக்கவாத சிகிச்சைப் பிரிவு நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. பக்கவாத நோயாளிகளுக்கு துரிதமான கண்டறிதல், மேம்பட்ட சிகிச்சை, ஒருங்கிணைந்த பல்துறை மருத்துவ சேவை மற்றும் திட்டமிட்ட மறுவாழ்வு சிகிச்சை மூலம் சிறந்த சிகிச்சை பலன்களை வழங்குவதே இந்தப் பிரிவின் முக்கிய நோக்கமாகும்.
இந்த புதிய முழுமையான பக்கவாத சிகிச்சைப் பிரிவை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப், திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் டாக்டர்கள் பிரவீன் முரளிதரன், தீபக் விஜயன், நிதா, ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.



