ஈரோடு, ஜூலை 20 –
தமிழ்நாடு அருந்ததியர் அரசியல் அதிகார உரிமை மீட்பு கூட்டியக்கம் ஒருங்கிணைப்பாளரும் விடுதலை வேங்கைகள் கட்சியின் மாநில தலைவருமான தமிழின்பன் தலைமையில் பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். கண்களில் கறுப்பு துணி கட்டியபடி வந்த அவர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
அதில் கூறியிருப்பதாவது ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள உள்ள பாண்டியம் பாளையம் ஊராட்சி சத்யாபுரம் பகுதியில் 70 குடும்பங்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் இதுவரை எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவில்லை மற்றும் சாலை மின் விளக்கு மற்றும் அடிப்படை வசதிகள் போன்ற போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக ஏற்கனவே பலமுறை மனு கொடுத்துள்ளோம். எனவே எங்களின் நீண்ட கால பிரச்சனையை தீர்த்து வைக்க உடனடியாக வீட்டு மனை பட்டா மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



