கோயம்புத்தூர், ஆக.27.
கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் உள்ள சித்ரா பகுதியில், லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் ‘லோட்டஸ் ஆப்டிக்’ என்ற புதிய கிளை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுமக்களுக்கு தரமான கண் பரிசோதனை மற்றும் நவீன கண் கண்ணாடி அணிகலன்கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் இந்த புதிய பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
புதிய கிளை திறப்பு விழாவில் தமிழ்நாடு மாநில இந்திய மருத்துவ சங்கத் தலைவர் ஏ.கே. ரவிக்குமார், இந்திய மருத்துவ சங்க செயலாளர் எஸ். கார்த்திக் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். லோட்டஸ் கண் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சங்கீதா சுந்தரமூர்த்தி, இயக்குநர் கே.எஸ். ராமலிங்கம் மற்றும் மருத்துவர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
லோட்டஸ் ஆப்டிக் மூலம் கண் பரிசோதனை, பார்வைக் குறைபாடுகளுக்கான ஆலோசனைகள், அதற்கேற்ற கண்ணாடிகள் மற்றும் நவீன கண் கண்ணாடி சட்டகங்கள் என பல்வேறு வசதிகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் பொதுமக்கள் கண் பரிசோதனை முதல் கண்ணாடி தேர்வு வரை ஒரே இடத்தில் மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 30, 2026 வரை நிறுவன முத்திரை கொண்ட கண்ணாடி சட்டகங்களுக்கு 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் கண்புரை அறுவை சிகிச்சை, பார்வைத் திருத்த அறுவை சிகிச்சை, விழித்திரை, கண் அழுத்த நோய், கருவிழி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு கண் மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.



