தருமபுரி, மே 20 –
தருமபுரி மாவட்ட CPI, CPI(M), CPM(ML) L ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் தருமபுரி தொலைபேசி நிலையம் அருகில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், சிசுபாலன், குமார், விஸ்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து திரும்பப் பெறு திரும்ப பெறு, பெட்ரோல் டீசல் விலை உயர்வை திரும்பப் பெறு திரும்பப் பெறு, உயர்த்தாதே உயர்த்தாதே, பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தாதே உயர்த்தாதே ஆகிய கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இடதுசாரி கட்சிகளின் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



