கன்னியாகுமரி, ஜூலை 20 –
அகில பாரத ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 4 நாட்கள் பயணமாக கடந்த 17-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணியளவில் கன்னியாகுமரிக்கு வந்தார். கன்னியாகுமரி வந்த அவரை விவேகானந்தா கேந்திர நிர்வாகிகள் வரவேற்றனர். விவேகானந்தா கேந்திராவில் தங்கிய அவர் கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கேந்திரா வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்துரையாடினார்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் சன்னதி தெருவில் உள்ள 24 வது சக்தி பீடமான தியாக சவுந்தரி பத்திரகாளி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் பலர் சாமி தரிசனம் செய்தனர். மாலையில் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திராவின் அகில இந்திய தலைவர் உடல் நல குறைவு காரணமாக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார், அவரை சந்தித்து நலம் விசாரித்தார் .
இன்று (திங்கட்கிழமை) காலை புறப்பட்டு செல்கிறார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வருகையையொட்டி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் மற்றும் கன்னியாகுமரி டிஎஸ்பி பிரகாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி நகரம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.



