இராமேஸ்வரம், நவ. 25 –
பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்திய ரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.
இதனால் ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் திடீர் பலத்த காற்று மற்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்வதைத் தவிர்க்கவும், பாதுகாப்பான நடவடிக்கைகளை எடுக்கவும் எச்சரிக்கும் வகையில். பாம்பன் துறைமுகத்தில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.



