பெரியகுளம், ஜூலை 18 –
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள விருக்கும், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் போது இல்லம்தோறும் வீட்டு வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை வரி உள்ளிட்டவற்றையும் சரிபார்க்க வேண்டும் எனவும், வரி விதிப்பில் எவரேனும் முறைகேடுகளில் ஈடுபட்டிருந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தாத வகையில் பெரிய குளம் நகராட்சி நிர்வாகம் செயல்பட வேண்டும் எனவும் நகர் மன்ற கூட்டத்தில் 24வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஓ.சண்முகசுந்தரம் கோரிக்கை வைத்தார்.



