கோவை, ஜூலை 27 –
கோவை மாவட்டம் குறிச்சி பகுதியில் உள்ள அருள்மிகு சேரமான் பெருமாள் நாயனார் வழிபாட்டு மண்டபத்தில் வ உ சிதம்பரம் பிள்ளையின் 155 வது பிறந்தநாள் விழா சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் கோவை மாவட்ட ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாளர் பேரியக்கம் சார்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தீர்மானங்களான, ஆதித்யா தொலைக்காட்சி நிகழ்ச்சி வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களை இழிவாக பேசிய நபர்களை கண்டித்தும் உடனடியாக ஆதித்யா தொலைக்காட்சி நிறுவனம் ஓரிரு நாட்களில் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் ஆதித்யா தொலைக்காட்சி தலைமை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும், 42 உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து வேளாளர் இனம் என்று அரசாணை வெளியிட வேண்டும், செப்டம்பர் 5 ஆம் தேதியை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



