தஞ்சாவூர், ஜூலை 14 –
தஞ்சாவூரில் தூய்மையான நகரமாக மாற்ற குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும். குப்பை தேங்கும் 263 இடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்று மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி கூறி உள்ளார்.
தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை தனியாகவும், காய்கறி கழிவுகள், டீத்தூள் உள்ளிட்ட மக்கும் தன்மை கொண்ட கழிவுகளை தனியாகவும், சானிட் டரி நாப்கின் டயப்பர் போன்ற சுகாதார கழிவுகளை தனியாகவும், பிரித்து வழங்க வேண்டும். வீடு களுக்கு வரும் மாநகராட்சி தூய் மை பணியாளர்கள் கைகளால் குப்பைகளை பிரிப்பதை விட பொதுமக்களே தங்கள் வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கு வது மனித நேய செயலாகும். பிரித்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மாநகராட்சியின் மைய ங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து அரியலூரில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது.
மக்கும் கழிவுகள் மாநகராட்சியி ல் செயல்பட்டு வரும் நுண்ணுர மயமாக்கல் மையத்திற்கு கொண் டு செல்லப்பட்டு இயற்கை உரமாக மாற்றப்படுகின்றன. வணிகர்கள் குப்பைகளை கடைகளுக்கு வெளி யே தரம் பிரித்து வைத்தால் அவை சேகரிக்கப்படும். இதற்காக தினமும் இரவு 8 மணி முதல் 12:00 மணி வரை மாநகராட்சி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. தஞ்சாவூர் மாநகராட்சியில் குப் பைகள் கொட்டப்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள 127 குப்பை சேகரிக்கும் பகுதிகளும், 136 குப் பை தொட்டிகளும் என மொத்தம் 263 இடங்கள் தொடர்ந்து கண்கா ணிக்கப்பட்டு, தூய்மையாக பராமரிக்கப்படும். எனவே பொதுமக்கள் பொது இடங்களுக்கு குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைக்க வேண்டும்.
இந்தப் பணிகளை மேயரும், மாநகராட்சி ஆணையரும் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறோம் இனி மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் இதனை கண்காணிப்பார்கள் , தூய்மை பணிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் தெரிவித்தால் அவை உடனடியாக சரி செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



