ஈரோடு, ஜூலை 14 –
தொப்பூர்-மேட்டூர் பவானி ரோடு, அம்மாபேட்டையில் அமைந்துள்ள சுங்கசாவடியை அகற்ற கோரி கடந்த ஒரு வருட காலமாக அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு தொடர் கோரிக்கை வைத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சுங்கசாவடியில் எந்தவித சாலை வசதியையும் அமைத்து கொடுக்காமல் சுங்கம் வசூல் செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், வாகனம் ஒட்டிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் அனைவரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
எந்தொரு சாலைகள் விரிவாக்கம் செய்யாமலும் எந்த வசதியும் இல்லாமலும் சுங்கசாவடி வசூலிப்பது தவறான முன்னுதாரணமாக அமைந்து பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
உடனடியாக மேற்படி உள்ள சுங்கசவாடியை அப்புறபடுத்தி கொடுக்கமாறு அனைத்து பொதுமக்கள், வாகனம் ஒட்டிகள், விவசாயிகள், தொழிலாளர்கள் சார்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.



