நாகர்கோவில், ஜூலை 23 –
ஜனநாயகம் திரைப்படம் வெளியான பிறகு முதலமைச்சர் விஜய் அவர்கள் எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களின் வரிசையில் வைத்து பார்க்கிற அளவிற்கு உயர்ந்துள்ளார் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: ஜனநாயகம் திரைப்படம் பெரும் நெருக்கடிக்கிடையே குறிப்பிட்ட தேதியிலிருந்து ஆறு மாதங்கள் கழிந்தே வெளியாகியுள்ளது. அதுவும் விஜய் முதலமைச்சரான பிறகு தான் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் ஜனநாயகம் ரிலீஸ் தமிழகத்தில் திருவிழா போன்றே கொண்டாடப்பட்டு வருகிறது.
ஜனநாயகம் திரைப்படம் வெளியான பிறகு மக்கள் முதல்வர் விஜயை உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்க்க தொடங்கி விட்டார்கள். எம்.ஜி.ஆர் முதலமைச்சரான பிறகு தான் 1977- ல் மீனவ நண்பன் என்கிற திரைப்படமும், அடுத்து மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படமும் வெளியாகியிருந்தது. அது போலவே ஆந்திரா முதல்வராக இருந்த என்.டி.ஆரின் திரைப்படமும் வெளியாகியிருந்தது.
அந்த வரிசையில் முதல்வர் விஜய்யின் ஜனநாயகம் திரைப்படமும் வெளி வந்துள்ளதால் மக்களும் முதல்வர் விஜய்யை, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் போன்ற அரசியல் தலைவர்களின் வரிசையில் வைத்து அழகு பார்க்க தொடங்கி விட்டார்கள். தமிழக அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத ஆளுமையாக முதலமைச்சர் விஜய் உருவெடுத்து வருகிறார். அவருக்கு மக்கள் பலமும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



