விளாத்திகுளம், ஏப்ரல் 20 –
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதி அதிமுக வேட்பாளராக போட்டியிடும் சத்யா தேசிய ஜனநாயக கட்சி கூட்டணியினருடன் இணைந்து வேம்பார் கிராமத்தில் உள்ள கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து வேம்பார் வேம்பார் பேருந்து நிலையம், சிலுவைபுரம், கலைஞானபுரம், பெரியசாமிபுரம், குஞ்சையாபுரம், பச்சையாபுரம் உள்ளிட்ட மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சத்தியா: நாட்டுப் படகு மீனவர்களுக்கு 350ல் இருந்து டீசல் 500 லிட்டராக உயர்த்தப்படும். விற்பனை வரிரத்து செய்யப்பட்ட எரிபொருள் மாதம் 4000 லிட்டர் வீதம் மேம்படுத்து தொழிலுக்காக வழங்கப்படும். கடலிலே மீன் பிடிக்கின்ற பொழுது விபத்துக்குள்ளாகி மீட்கப்படாமல் இருக்கின்ற மீனவர்களின் குடும்பங்களுக்கும், மருத்துவ வசதி வழங்கப்படாமல் நோயினால் கடலில் உயிரிழக்கின்ற மீனவர்களின் குடும்பங்களுக்கும் விபத்து காப்பீடாக 25 லட்சம் வழங்கப்படும்.
கடலிலே பாதிப்புக்குள்ளாக கூடிய மீனவர்களையும் மீன்பிடி படகுகளையும் மீட்பதற்கு மீனவ மீட்பு குழு ஏற்படுத்தப்படும். கடலில் பழுதடைந்த படகுகளை மீட்க கடற்கரைப் பகுதியில் இழுவைபடகு அமைக்கப்படும். மழை வெள்ள காலங்களில் முகத்துவாரம் தூர்வாரப்படும். மேம்பாடு பகுதியில் கூடுதலாக தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்படும். மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கப்படும். உள்நாட்டு மீனவர்கள் நலன் கருதி ஏரிகளிலும் குளங்களிலும் மீன் வளர்ப்பை ஊக்கப்படுத்த சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
குளங்களிலும் ஆறுகளிலும் உள்நாட்டு மீனவர்கள் சிரமம் இன்றி மீன் பிடிக்க மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வலை மற்றும் உபகரணங்கள் விலையில்லாமல் வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்ட மீனவர்களுக்கு மீனவர் நலவாரியம் மூலம் மாதம் 2500 ரூபாய் ஓய்ஊதியம் வழங்கப்படும்.
அதேபோல் திமுக ஆட்சியில் பெண்களுக்கான பாதுகாப்பு தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளதாகவும், எங்கு பார்த்தாலும் போதை கலாச்சாரத்தினால் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளது,எனவே மக்களுக்கான நல்லாட்சி அமைந்திட இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு சத்யா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பாஜக மாவட்ட செயலாளர் சரவணன் கிருஷ்ணன், பாஜக தெற்கு ஒன்றிய தலைவர் சுயம்பு, தெற்கு ஒன்றிய பார்வையாளர் பார்த்திபன், கந்தசாமி அம்மா மக்கள் முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம், கணபதி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



