கிருஷ்ணகிரி, ஜூலை 7 –
கிருஷ்ணகிரி தமிழக வெற்றி கழக அலுவலகத்தின் அருகில் உள்ள டான்சியில் நடைபெற்றது. தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் ஒன்றாம் தேதி வழங்க வேண்டிய சம்பளம் மற்றும் அரசு ஏற்கனவே வழங்கிய 16 சதவீத ஊதிய உயர்வு, உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாயம், எட்டு மணி நேர வேலை, தங்குமிட வசதி, கழிப்பிட வசதி, வேலை இழந்த தொழிலாளருக்கு மீண்டும் அதே நிலையானைபடி பிழைப்பு ஊதியத்துடன் வேலை போன்றவை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஒன்றாம் தேதி வழங்க வேண்டிய சம்பளம் ஆறாம் தேதி ஆகிய வரை விளங்காத நிர்வாகத்தை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் போராட்டம் எடுப்பதாக தொழிற்சங்கத்தின் சார்பாக மண்டல செயலாளர் சாந்தகுமார், மாவட்ட தலைவர் முத்துக்குமார், மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். மாவட்டத்தின் வரவு செலவு கணக்குகளை மாவட்ட பொருளாளர் ஜெயவேல் கூட்டத்தில் சமர்ப்பித்தார். மேலும் பல தொழிலாளர்கள் கலந்து கொண்டு தொழிற்சங்கத்திற்கு போராட்டம் எடுப்பதாக ஆதரவு தெரிவித்து கூட்டம் நிறைவு செய்தார்கள்.



