வேலூர், ஜூலை 06 –
வேலூர் மாவட்டம் கம்மசமுத்திரம் ஊராட்சியில் அமைந்துள்ள அரச மரத்தடி அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய புனராவர்த்தன ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூலை 5 ஞாயிறன்று நடைபெற்றது.
இதில் மங்கள இசை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி பிரவேச பலி யாகசாலை பிரவேசம் முதற்காலையாக பூஜை மகா பூர்ணாஹூதி, இரண்டாம் கால யாக பூஜை தம்பதி சங்கல்பம் விசேஷ ஹோமங்கள் நடத்தப்பட்டு நிறைவாக கும்பாபிஷேக கலசம் புறப்பட்டு அரச மரத்தடி ஸ்ரீ முனீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இரவு ஆரணி ரோஜா நாடக மன்றத்தினால் நாடகம் நடத்தப்பட்டது. இதனை ஒட்டி 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளான வி.தயாளன் வி.பாஸ்கரன், அருள்ஜோதி ஜெய்சங்கர், சங்கீதா சந்திரன், சந்தியா தேவராஜ் மற்றும் முனீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.



