தருமபுரி, ஜூன் 30 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் மண்டபத்தில் கிராமீன் கூட்டா இந்தியா பௌண்டேஷன் நிறுவனம் மற்றும் காவல் துறை இணைந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சமூக பொருளாதார வளர்ச்சி குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் சி.ஏ.ஜி.எல் நிறுவன கிளை மேலாளர் ரஞ்சித்குமார் வரவேற்று பேசினார்.
கிராமீன் கூட்டா இந்தியா பௌண்டேஷன் நிறுவனத்தின் மண்டல மேலாளர் பசவராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்கள் சமூகத்தில் பொருளாதார வளர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்களுக்கான முழுமையான வளர்ச்சியை அடைய முடியும். மேலும் பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள் குறித்து தைரியமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன் வந்தால் பாலியல் குற்றங்கள் நடக்காது என்றும் மேலும் பெண்கள் கல்வி, வேலைவாய்ப்புக்களில் மேலும் மேலும் தங்களை வளர்த்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
அதனை தெடர்ந்து தருமபுரி குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் அருன் பேசும் போது: குழந்தை திருமணங்களை அறவே தடுக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்தும், போக்சோ சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் திடிர் தீ விபத்து, மின் விபத்து குறித்தும், ஆறுகளில், கிணறுகளில் தண்ணீரில் சிக்கி கொண்டவர்களை பாதுகாப்புடன் எவ்வாறு மீட்க வேண்டும் என்பன குறித்து பயிற்சி அளித்தார்.
இம்முகாமில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயா, பகுதி மேலாளர்கள் குமரவேல், சிலம்பரசன்ராஜா, கிராமீன் கூட்டா இந்தியா பௌண்டேஷன் நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கிளை மேலாளர் வெற்றிவேல் நன்றி கூறினார்.



