நாகர்கோவில், ஜூன் 23 –
களியக்காவிளை அருகே மெதுகும்மெல் முண்டபிலாவிளை பகுதியை சேர்ந்த வர்கீஸ் மகன் ஜோபின் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஜோபின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
உத்தரவின்படி தற்போது சிறையில் இருந்து வரும் குற்றவாளி ஜோபின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேலும் தீவிர படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.



