தஞ்சாவூர், ஜூன் 23 –
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு, பணிபுரியக் கூடிய பெண்கள் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் குறித்து உள்ளூர் குழு மற்றும் உள்ளக குழு தலைவர், உறுப்பினர்களுக்கான திறன் விழிப்புணர்வு பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் மூலம் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், விழிப்புணர்வு திறன் மேம்பாடு பயிற்சி நடத்தப்பட்டது.பணி புரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் 2013 கீழ் செயல்படும் உள்ளூர் குழு மற்றும் உள்ளககுழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியினை மாவட்ட கலெக்டர் ரேவதி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரி மற்றும் தனியார் நிறுவனங்களில் இருந்து உள்ளக புகார் குழு உறுப்பினர்கள் 100 பேர் கலந்து கொண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக் டர் ரேவதி பேசிதாவது: பெண்கள் முன்னேற்றம், சமூக பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு பணி புரியக்கூடிய பெண்களின் பாதுகாப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம் பற்றி கூறினார். மேலும் இன்றைய சூழலில் பெண்கள் பெண்களுக்கு வரக்கூடியவர்களில் பெண்கள் 17 விழுக்காடு இருந்து தற்போது 50 விழுக்காடாக உயர்ந்து அனைத்து துறை தலைமை பொறுப்பை பெண்கள் உயர்ந்து கொண்டு உள்ளார்கள் சமூகத்தில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளும் சமூகத்தில் பாதுகாப்புடன் வாழ உதவி செய்ய வேண்டும் என்ற இந்த குழுவிற்கு தலைமை இருக்கக்கூடிய ஒரு மூத்த தலைவர் பெண்மணியாக இருக்க வேண்டும் என்றும் உறுப்பினர்கள் உண்மையானவர்களாகவும் ரகசியத்தை காக்க கூடியவர்களாகவும் தைரியமானவர்களாகவும் நடுநிலைமையை பின்பற்ற கூடியர்களாக சட்டத்தை நேர்மையாக சட்டப்படி நடவடிக்கை கட்டாயம் எடுக்கக் கூடியவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



