தேனி, ஜூன் 23 –
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பெரியகுளம் நகர் 14 மற்றும் 15 வது வார்டு தவெக நிர்வாகிகள் சார்பில் கழக அடிப்படை உறுப்பினர் முருகேஸ்வரி கார்த்திக், குழந்தைச் செல்வங்கள் புரவலர் சிவானி கார்த்திக், நிவேதிதா, நிவேதிகா ஆகியோரது ஏற்பாட்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாவலராக விளங்கி வரும் மக்கள் சக்தி நாயகர் முதலமைச்சர் விஜய் அங்கிள் பிறந்தநாள் விழாவை இனிப்புகளுடன் நாங்கள் கொண்டாடி வருவது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது என குழந்தை செல்வங்கள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் நகர துணை செயலாளர் மதன், கழக உறுப்பினர்கள், கே எஸ் குபேந்திரன், பொறியாளர் ராமநாதன், இஸ்மாயில், பிரபு, பால சுப்பிரமணி, முகிலன் பனையடியான், பால்பாண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி பெரிய குளம் நகர துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் தவெக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



