நாகர்கோவில், ஜுன் 19 –
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாள் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் அறிவுறுத்தலின் படி நாகர்கோவில் மாநகராட்சி 15வது வார்டு சார்பில் காமராஜபுரம் சி.எஸ்.ஐ தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வுக்கு நாகர்கோவில் மாநகர செயலாளர் சிவன் விஜய் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். 15வது வட்டச் செயலாளர் ஜெரின் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்து கூறினார். இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகர துணை செயலாளர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



