திருச்சி, ஜூன் 18 –
மணப்பாறை அருகே சீகம்பட்டியில் முனியப்பன் தனது தாயார் வீட்டுக்கு வெளியே கட்டிலில் படுத்திருந்தபோது, வீட்டிற்குள் ஊர்ந்து சென்ற ஏழடி நீளப் பாம்பை கண்டார். இது குறித்து அவர் தனது மகனிடம் கூற, மகன் மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அந்தப் பாம்பைப் பிடித்து, அருகில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.



