மார்த்தாண்டம், ஜூன் 12 –
பளுகல் அருகே கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் லால்கிருஷ்ணன் (28). இவரது மனைவி வினிஷா (26). இவர்களுக்கு 3 வயதில் வைஷாக் என்ற மகன் உள்ளார். லால் கிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு விடுமுறைக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் சம்பவ தினம் லால் கிருஷ்ணன் தனது பைக்கில் சூழால் என்ற இடத்திற்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த வினிஷா தனது மாமியார் ஜெயந்தியிடம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வருவதாக கூறி மகனுடன் ஆட்டோவில் சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பி வரவில்லை.
தொடர்ந்து கணவர் மற்றும் மாமியார் வினிஷாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து லால் கிருஷ்ணன் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் குழந்தையுடன் மாயமான இளம்பெண் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


