தேனி, ஜூன் 12 –
தேனி மாவட்டம் பெரிய குளம் நகராட்சியில் மாதாந்திர சாதாரண நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களது தம்பியும், 24 வது கவுன்சிலருமான ஓ. சண்முக சுந்தரம் பேசும் போது: தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று சிறப்பான முறையில் ஆட்சி புரிந்து வரும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் 717 அரசு மதுக்கடைகளை மூடி ஆணை பிறப்பித்துள்ளதை மனமுவந்து வரவேற்பதாகவும், மதுக்கடை குறைப்பு நடவடிக்கை வேண்டாம், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்றும், தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்களை தடுக்கும் வகையில் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை வரவேற்பதோடு, பெண்கள், மற்றும் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பெரியகுளம் நகராட்சி நிர்வாகத்தில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது கடமைகளை செய்ய தவறி வருகின்றனர். இதனால் மன்ற உறுப்பினர்களுக்கு கெட்ட பெயர் ஏற்படுகின்றது. பொது மக்களின் நலன் கருதி அரசு பணியை (கடமையை) செய்ய தவறிவரும் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெரியகுளம் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தடையின்றி சுத்தமான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பாதாள சாக்கடை இணைப்பு, மற்றும் அடைப்பு நீக்க பணிகளுக்காக பொதுமக்களிடம் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதை தவிர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வணிக ரீதியாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு தொழில் வரி விதிக்காமல் எதிர்பார்ப்பின் அடிப்படையில் வீட்டு வரி மட்டுமே விதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகின்றது.
அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தி வரும் பில்டிங் செக்சன் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் உட்பட அனைத்து உணவுகளிலும் சுகாதாரத்தினை பேணி காக்க, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்வதோடு நாகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் உணவகங்களில் சாலையோரம் வைக்கப்பட்டுள்ள அடுப்புகளை
பொதுமக்கள், பாதசாரிகள், வாகன ஓட்டிகளின் நலன்கருதி அடுப்புகளை உணவகத்தினுள் வைத்து சமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் மீறும் உணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகளில் ஏற்பட்டுள்ள குண்டு குழியுமான பள்ளங்களை நகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி சரிசெய்து கொடுக்க முன்வராத நிலையில் தனது சொந்த செலவினில் ஆங்காங்கே பேட்ஜ் ஒர்க் செய்திட அனுமதி வழங்க வேண்டும் எனவும், நகர் பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள், ஆடுகள், கழுதைகள் மற்றும் நாய்களால் ஏற்படும் விபத்துகளை, அச்சுறுத்தல்களை தடுக்கும் வகையில் அவகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்கள் மீது வழக்குபதிந்தும் , அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ளுதல், நகர் பகுதிகளில் நாய் தொல்லைகள் அதிகரித்துள்ளது. கண் துடைப்பிற்காக பணி மேற்கொள்ளாமல் வெறிநாய் கடியில் இருந்து குழந்தைகள் பெண்கள் மற்றும் பொதுமக்களை காக்கும் வகையில் நாய்களை பிடித்து கட்டுப்படுத்த வேண்டும் என்றும், நகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் உரிமம் மற்றும் உரிமம் இல்லாத இறைச்சிக் கடைகள், தேனீர் விடுதிகள், ஹோட்டல்களில் உணவு பொருட்களை நியூஸ் பேப்பர்களில் வழங்குவதை தடுத்திடவும், சுற்றுச்சூழலை காக்கும் வகையில், பாலிதீன் பயன்பாட்டை குறைத்திடும் வகையில் வாழை இலை, தேக்கு இலைகளில் இறைச்சிகளை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.



