புதுக்கடை, ஜூன் 11 –
புதுக்கடை அருகே உள்ள முஞ்சிறை பகுதியை சேர்ந்தவர் அஜயன் மனைவி சந்தியா மோகன் (43). அஜயன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியருக்கு சௌமியா (19), அருண் (17) என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் சௌமியா பிஎஸ்சி நர்சிங் படித்து வந்தார். ஆறு மாதம் பிஎஸ்சி நர்சிங் படிக்க கல்லூரி சென்று விட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த சௌமியாவை திடீரென காணவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும், மாணவி குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதையடுத்து தனது மாயமான மகளை கண்டுபிடித்து தருமாறு சந்தியா மோகன் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


