தருமபுரி, ஜூன் 05 –
தருமபுரி நகராட்சி கூட்டம் அறிஞர் அண்ணா நகர மன்ற கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு அவர்களது வார்டுகளில் உள்ள குடிநீர் பிரச்சனை, கால்வாய் வசதி, தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நாய்களால் பொதுமக்களுக்கு அதிக அளவில் தொல்லைகள் இருப்பதால் உடனடியாக நாய்களை பிடிக்க வேண்டுமென்று தெரிவித்தனர்.
நகர மன்ற உறுப்பினர்கள் முன் வைத்த கோரிக்கைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையர் வசந்தா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்தின் மூலம் கொண்டு வந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் துணை நகர மன்ற தலைவர் நித்ய அன்பழகன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



