தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பெலமாரனஹள்ளி கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அவர்களிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது நான் பட்டியலின சமுதாயத்தை சேர்ந்தவன் நானும் பாலக்கோடு நகரம் கனம் பள்ளி தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் சேர்ந்து பெலமாரனஹள்ளி கிராமத்தில் கவிதா .சிவராஜ் ஆகியோரிடம் மூன்று ஏக்கர் நிலத்தை கடந்த 22,9,2022 தேதியன்று விற்பனை செய்ததாக விலைக்கு பேசி எங்களிடமிருந்து ரூபாய் 5,80 ,000 தொகையினை முன் பணமாக பெற்றுள்ளார்கள் அதன் பிறகு நாங்கள் நிலத்தின் வில்லங்கம் குறித்து பரிசோதனை செய்ததில் மேற்படி நபர்கள் ஆகிய இருவரும் எங்களுக்கு விற்பனை செய்வதாக தெரிவித்து விற்பனை செய்த நிலத்தில் சுமார் 1 1/2 ஏக்கர் நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததாக கிரய ஆவணம் பதிவு செய்த விவரம் தெரிய வந்தது இதனை தெரிந்த நான் மேற்படி நபர்களிடம் கேட்டு பணத்தை திருப்பி கேட்டபோது என்னை ஆபாசமாக பேசியதோடு இல்லாமல் என்னை தாக்கவும் முற்பட்டனர் எனவே காவல் கண் காணிப்பாளர் அவர்கள் என்னை ஏமாற்றும் எண்ணம் கொண்டுள்ள மேற்படி நபர்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து எனக்கு சேர் வேண்டிய பணத்தை பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு காவல் கண் காணிப்பாளர் அவர்களிடத்தில் அளித்த மனுவில் கிருஷ்ணன் கூறியுள்ளார்.



