மதுரை, ஜூலை 13 –
கரூர் கோவில் நிலங்களை பட்டா செய்ய பிறப்பித்த ஆணையை தடை விதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு. வழக்கை நாளை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. சுமார் 25000 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் நிலத்தை பத்திரப்பதிவு செய்வதற்கான தடையை நீக்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த ஆணைக்கு தடை விதிக்க கோரி அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க கோரி முறையீடு. சேலத்தைச் சேர்ந்த திருத்தொண்டர்கள் அறக்கட்டளையின் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் செய்த முறையீடு.
கரூர் மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி திருக்கோயில், ரவீஸ்வரர் சுவாமி திருக்கோயில், குப்புச்சிபாளையம் விக்ருதீஸ்வரர் திருக்கோயில் சொந்தமான பல கோடி மதிப்புள்ள நிலங்கள் 15 கிராமங்களில் உள்ளது இதில் 3390 தனி நபர்கள் பெயரில் பட்டா வழங்கபட்டு இந்து சமய அறநிலையத்துறை பத்திரப்பதிவிற்கு தடை செய்யப்பட்டது இதில் சுமார் 3085 ஏக்கர் பட்டா நிலங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கம் செய்யலாம் அறிவிக்கப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கார்த்திகேயன் சக்தி வேலு அமர்வில்
இதற்கு தடை விதிக்க வேண்டும் கோவில் நிலங்கள் இன்று பட்டாக்கள் செய்வதற்காக முகாந்திரம் உள்ளது எனவே இன்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என முறையீடு செய்தார். இதற்கு நீதிபதிகள் வழக்கை முறையாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார்.


