கோவை, 18.08.2026
“We Lead The Leaders–Lead The Change” அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்த பேரணியை,
இயற்கை விவசாயி மற்றும் சூழலியல் ஆர்வலர் சுட்டையில்லா சாமியப்பன் தொடங்கி வைத்தார்.
“நெகிழி இல்லா திருப்பூர்,குப்பை இல்லா திருப்பூர்” என்ற கருத்தை வலியுறுத்தி நடைபெற்ற இந்த பேரணியில்,நெகிழிப் பயன்பாட்டை தவிர்ப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பது,தூய்மையான நகரை உருவாக்குவது உள்ளிட்டவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள்,
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தியவாறு,பல்வேறு விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.
மேலும் “மாற்றுவோம், மாற்றுவோம்,ஒன்றிணைவோம்,மாற்றுவோம்,முன்னேறுவோம்”என்ற முழக்கத்துடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியில்,சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருப்பூரை தூய்மையான,பசுமையான நகரமாக மாற்றுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பேரணியின் மூலம் வலியுறுத்தப்பட்டது.



