சென்னை, ஜூன் 05 –
சென்னை ஜாபர்கான்பேட்டை, சோழன் தெரு பாரி நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ இரத்தின கணபதி ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.
மங்களகரமான பராபவ வருஷம் வைகாசி மாதம் சதுர்த்தி திதி, உத்திராட நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் சிம்ம லக்கனத்தில் ஸ்ரீ இரத்தின கணபதி மற்றும் பரிவார தெய்வங்களான வள்ளி தெய்வ சேனா சமேத பால சுப்பிரமணியர், துர்க்கை அம்மன், மஹாலட்சுமி, ஐயப்பன், வீரபக்த ஆஞ்சநேயர், விசாலாட்சி அம்பிகை, சமேத, காசி விசுவநாதர், கால பைரவர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரஹம், சீரடி பாபா ஏனைய ஆலய தெய்வங்கள் அனைத்துக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சுவாமி அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. சுவாமி தரிசனம் செய்த அனைத்து பக்த கோடிகளுக்கும் ஆலயம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆலய தலைவர் பாரி நகர் சசி மற்றும் ரஞ்சனி பாலசுப்பிரமணியன் மேலும் ஆலய விழா குழுவினர் சிறப்பாக கும்பாபிஷேகத்தை நடத்தினர்.



