தஞ்சாவூர் மே 24
தஞ்சாவூர் அருகே வயல்களுக்கு மத்தியில் தார் கலவை ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் -விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர் தாசில்தார் அலுவலகம் எதிரே பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்கத் துணைத் தலைவர் வழக்கறிஞர் ஜீவக்குமார் தலைமை தாங்கினார்
இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மோகன், பாபு, தனபால், நளகிள்ளி, கோவிந்தராஜ் ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலர் கண்ணன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ரவிச்சந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தஞ்சாவூர் அடுத்துள்ள சக்கர சாமந்தம் உள்ளிட்ட 10 கிராமங்களி ல் விவசாயிகள் குடிநீர், சுற்றுச் சூழல், பொது சுகாதாரத்தை பாதிக் கும் வகையில் ராமநாதபுரம் ஊராட்சியில் வயல்களுக்கு மத்தியில் அபாயகரமான நச்சுப் புகையை வெளியிடும் தார் கலவை ஆலை அமைப்பதற்கு கொடுத்த அனுமதியை ஊராட்சி ஒன்றிய ஆணையர் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப் பட்ட தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயத்தை பாழ்படுத்தும் எந்த ஆலைக்கும் அனுமதி கொடுக்கக் கூடாது, என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இந்தப் போராட்டம் குறித்து தகவல் அறிந்த தாசில்தார் சிவக்குமார் போராட்டம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது வயல்களுக்கு மத்தியில் தார் கலவை ஆலை அமைத்துக் கொடுத்த அனுமதி ரத்து செய்து விட்டு, வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். இந்த பிரச்சனை தொடர்பான வழக்கு கோட்டின் இருப்பதால் இறுதி தீர்ப்பு வரும் வரை தார் கலவை ஆலையில் எந்த வேலையும் நடக்க கூடாது. மீறி ஆலை திறந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் விவசாயிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக எழுத்து பூர்வமா க மனு அளித்தால் மாவட்ட கலெக்ட ரின் பார்வைக்கு கொண்டு சென்று மேல் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யப்படும் என தாசில்தார் சிவகுமார் தெரிவித்தார். இதையடு த்து விவசாயிகள் எழுத்து பூர்வமாக மனு அளித்து விட்டு காத்திருப்பு போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர்



