ஈரோடு, ஜூன் 4 –
உதயம் பிளவர் மில், கீர்த்தனா டிரேடர்ஸ், உதயம் ஸ்டோர்ஸ் மற்றும் கொங்கு கலையரங்கம்- கவிதாலயம் – கொங்கு வேளாளர் இளைஞர் சங்கம் – கவிதாலயம் இசைப்பயிற்சி பள்ளி சார்பாக கொங்கு கலையரங்கில் 312 மாணவ மாணவிகளுக்கு முதல்வன் விருது வழங்கும் விழா நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற 312 மாணவ மாணவிகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
கவிதாலயா ராமலிங்கம் சென்னை ஸ்ரீநிதி அனந்த்ராம் கணேஷ் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர். கொங்கு கலையரங்கம் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் சந்திரகேசர், பொருளாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதயம் பிளவர் மில் உரிமையாளர் உதயம் செல்வம் சௌந்தர்யன் தலைமை தாங்கினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஆவடி காவல் இணை ஆணையர் சிவகுமார், அவரது துணைவியார் ஸ்ரீவித்யா சிவகுமார் ஆகியோர் முதல்வன் விருதுகளை வழங்கினர்.
விழாவில் எம்.எம்.சி.எச் மருத்துவமனை சீனியர் டாக்டர் சதாசிவம் செங்குந்தர் கல்வி கழகம் தாளாளர் சிவானந்தம் எல்.கே.எம் டாக்டர் நடேசன் காலேஜ் ஆப் பார்மஸி துணைத்தலைவர் எம். தங்கமுத்து அருள் சித்தா மருத்துவமனை அருள் நாகலிங்கம் அம்மன் கலை அறிவியல் கல்லூரி தாளாளர் ஜெயலட்சுமி டாக்டர் ராமமூர்த்தி மற்றும் கணேசன், டாக்டர் சுகுமார், ஜோதிடர் ஒம். உலகநாதன், அசோகன், பரதநாட்டிய கலைஞர் திருநங்கை பொன்னி, வழக்கறிஞர் பாலமுருகன், சீனிவாசன் கவிதா – மாரிதாஸ், ஸ்ரீராம் டிரேடர்ஸ், செல்வம், மாரீஸ் வேணுகோபால், நித்திய
சாஷ்,அன்பு குமார், ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவில் அறங்காவலர் ராவணன் பிரகாஷ் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.



