விளாத்திகுளம், ஜூன் 03 –
முன்னாள் முதல்வர் கருணாநிதி 103 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இந்த நிகழ்வில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, அன்புராஜன், இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, திமுக தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், வார்டு செயலாளர்கள், வார்டு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள், மாணவரணி அக்ஷய் மார்கண்டேயன், இளைஞரணி ஸ்ரீதர் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.



