மார்த்தாண்டம், நவ. 28 –
களியக்காவிளை சப்-இன்ஸ்பெக்டர் மகேந்த் தலைமையிலான போலீசார் இன்று மடிச்சல் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தபோது மடிச்சல் பகுதியை சேர்ந்த சத்யதாஸ் (57) என்பவர் அவரது பெட்டிக்கடையில் 180 மில்லி கொள்ளளவு கொண்ட 30 பாட்டில் மதுபானங்களை டாஸ்மாக்கில் இருந்து வாங்கி அதிக விலைக்கு விற்பனையில் ஈடுபட்ட வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் சத்யதாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


