தேனி, செப். 18 –
தேனி மாவட்ட சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான ஸ்கேட்டிங் போட்டிகள் சாந்தி நிகேதன் பள்ளியில் நடைபெற்றது. இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்கள் 13 பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை கல்வி குழுமத்தைச் சார்ந்த
ஆண்டிபட்டி லிங்கா குளோபல் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஆர்.ராகயாழினி
போட்டியில் வெற்றிபெற்று மூன்றாம் இடம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், மெடல்களை, பள்ளி முதல்வர் டேவிட் அருண் பாக்யராஜ் வழங்கினார். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தலைவர் முனைவர் கே. ஸ்ரீதரன், இயக்குநர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரன், பள்ளி முதல்வர் சோனியா காந்தி, உடற்கல்வி ஆசிரியர் பன்னீர் செல்வம் ஆகியோர் பாராட்டினர்.



