திருச்சி, ஜூன் 1 –
தமிழக முதலமைச்சராக பதவியேற்ற பிறகு முதல்முறையாக திருச்சிக்கு வருகை தந்த முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக வந்த அவரை காண ஆவலோடு காத்திருந்த தொண்டர்கள் தடுப்புகளை தாண்டி குதித்து ஓடினர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலமைச்சரின் வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.



