கிருஷ்ணகிரி, மே 29 –
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் மற்றும் உள்வட்டம், சென்னப்பள்ளி தரப்பு, சின்னாறு வளைவு அருகில் சுமார் 4.30 மணி அளவில் வெங்கடாபுரம் கிராமம், மல்லப்பாடி அஞ்சல் பர்கூர் வட்டத்தை சார்ந்த பத்தியப்பா (50) என்ற நபர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது சின்னார் யூட்டன் அருகில் ஒசூரில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த போது லாரி வாகனம் மோதியதில் மேற்படி நபருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
அந்த வழியாக வருகை தந்த கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.தினேஷ் குமார்
காயம் ஏற்பட்ட நபருக்கு முதல் உதவி செய்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்தார். இந்த விபத்து சம்பந்தமாக சூளகிரி காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



