திருச்சி, மே 27 –
திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட்டில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு செய்ய வந்தபோது, தவெக தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்து செல்ஃபி எடுக்கத் தொடங்கினர். இது கட்சி நிகழ்ச்சி அல்ல, அரசு நிகழ்ச்சி என அதிகாரிகள் அறிவுறுத்தியும் தொண்டர்கள் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தவெக தொண்டர்களால் அரசு நிகழ்ச்சி கட்சி நிகழ்ச்சியாக மாறியது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



